பக்கம் எண் :

மலரும் உள்ளம்129

பெண்ணின் தாயார் இதுகேட்டுப்
பெரிதும் வருத்தம் கொண்டாளாம்.

"ஐயோ, தலைவிதி" என்றெண்ணி
அங்கும் இங்கும் நடந்தாளாம்.

*
வந்தவர் சாப்பிடப் பானையிலே
வாங்கி வைத்த பாலையெலாம்

சந்தடி யின்றி மாப்பிள்ளை
சமையல் கட்டில் தீர்த்தாராம்!

திருடித் திருடிப் பாலையெலாம்
தீர்த்துக் கட்டும் மாப்பிள்ளையைப்

பார்த்து விட்டாள், பெண்தாயார்;
பலத்த சத்தம் போட்டாளாம்.

உடனே அங்கே எல்லோரும்
ஒன்றாய்க் கூடி வந்தனராம்.

மாப்பிள்ளைப் பூனை வழியின்றி
மத்தியில் நின்று விழித்தாராம்.

*
“திருட்டுப் பிள்ளைக்கு என்பெண்ணைத்
திருமணம் செய்ய முடியாது !