பக்கம் எண் :

140மலரும் உள்ளம்

பூனை பூனைதான்!

பாட்டி வீட்டில் ஒருபூனை
    பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
    உண்டு நன்கு கொழுத்ததுவே.

ஒருநாள் அறையில் கண்ணாடி
    ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
    விறைத்து அதனில் பார்த்ததுவே.

கறுத்த நீளக் கோடுகளும்
    கனத்த உடலும் கண்டதுமே,
“சிறுத்தை நான்தான். எவருக்கும்
    சிறிதும் அஞ்சிட மாட்டேனே!”

பூனை இப்படி எண்ணியதே.
    புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
    பாய்ந்து, உடைத்து நொறுக்கியதே.