பூனை
பூனைதான்!
பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே.
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.
ஒருநாள் அறையில் கண்ணாடி
ஒன்று இருக்கக் கண்டதுவே.
விரைவாய் அருகில் சென்றதுவே;
விறைத்து அதனில் பார்த்ததுவே.
கறுத்த நீளக் கோடுகளும்
கனத்த உடலும் கண்டதுமே,
“சிறுத்தை நான்தான். எவருக்கும்
சிறிதும் அஞ்சிட மாட்டேனே!”
பூனை இப்படி எண்ணியதே.
புலியாய்த் தன்னை நினைத்ததுவே.
பானை சட்டி யாவையுமே
பாய்ந்து, உடைத்து
நொறுக்கியதே.
|