பக்கம் எண் :

மலரும் உள்ளம்141

ஆட்டம் போட்டு வீட்டினையே
    அதிரச் செய்தது, புலிபோலே.
பாட்டி அங்கே வந்திடவே
    பாய்ந்தது பூனை அவள்மீதும்!

பாட்டி கோபம் கொண்டனளே.
    பக்கம் கிடந்த துடைப்பத்தால்
போட்டாள் பூனை தலைமேலே,
    "பொத்"தென உதைகள், புத்திவர

அடியைத் தாங்க மாட்டாமல்
    அங்கே பூனை படுத்த துவே.
"கொடிய புலியாய் எண்ணியதே
    குற்றம் குற்றம் குற்றம்தான்!

பூனை என்றும் பூனைதான்.
    புலியாய் மாற முடியாது"
தானே இப்படி எண்ணியதே;
    சாது வாக மாறியதே!