காணாத முள்
"குடுகு" டென்று விரைவிலே
கோபு ஓடி வந்தனன்.
“அப்பா, கடிகா ரத்திலே
அந்தச் சிறிய முள்ளையே
காண வில்லை! யாரதைக்
கழற்றிக் கொண்டு போயினர்?
ஒடிந்து விழுந்து போனதோ!
ஒன்றும் அறியேன் நான்” எனக்
கூறித் தந்தை தம்மையே
கூட்டி வந்து காட்டினன்.
பார்த்தார் தந்தை, முட்களை
பார்த்துப் பார்த்துச் சிரித்தனர்.
விஷயம் அறியாக் கோபுவோ
விளக்கிக் கூற வேண்டினன்.
|