திருடன் கண்டது?
திருடன் ஒருவன் இரவிலே
திருட எண்ணம் கொண்டனன்;
அருகில் உள்ள ஊரையே
அடைந்து திருடச் சென்றனன்.
வயலின் நடுவே வழியினில்
மனிதன் நிற்கக் கண்டனன்;
பயந்து அங்கே நின்றனன் ;
பதுங்கி மறைவில் ஒளிந்தனன்.
அந்த மனிதன் நடுவிலே
அசைந்தி டாமல் நிற்கவே.
"எந்த வழியில் செல்வது?"
என்று எண்ணிப் பார்த்தனன்!
போக வழியும் இல்லையே!
பொறுமை பறந்து போனதே!
வேக மாகத் தடியுடன்
"விறுவி"ரென்று சென்றனன்.
|