பக்கம் எண் :

176மலரும் உள்ளம்

மாமரம்

தெருவி லுள்ள மாமரம்,
    தின்னத் தின்னப் பழங்களை
அருமை யோடு தந்திடும்.
    அதனை ராமு பார்த்தனன்.

கல்லைக் கையில் எடுத்தனன்;
    கையை நன்கு ஒங்கினன்;
பல்லைக் கடித்துக் கொண்டனன்; 
    பலமாய் வீசி எறிந்தனன்.

விட்ட கற்கள் பழங்களை 
    வீழ்த்தி விட்டுக் கிளைகளில்
"பட்பட்"டென்று மோதின.
    பட்டை யாவும் பெயர்ந்தன.

ஆசை கொண்டு கற்களை 
    அள்ளி, அள்ளி வீசினன்;
வீசி எறிந்து பட்டைகள்
    மிகவும் பெயரச் செய்தனன்.