பக்கம் எண் :

178மலரும் உள்ளம்

அன்னை மொழி

குருவி ஒன்று மரத்திலே
    கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
    அதில் வளர்த்து வந்தது.

நித்தம், நித்தம் குருவியும்
    நீண்ட தூரம் சென்றிடும்.
கொத்தி வந்து இரைதனைக் 
    குஞ்சு தின்னக் கொடுத்திடும்.

“இறைவன் தந்த இறகினால்
    எழுந்து பறக்கப் பழகுங்கள்.
இரையைத் தேடித் தின்னலாம்”
    என்று குருவி சொன்னது.

“நன்று, நன்று, நாங்களும்
    இன்றே பறக்கப் பழகுவோம்”
என்று கூறித் தாயுடன்
    இரண்டு குஞ்சு கிளம்பின.