எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள் - அங்கு
எமனைப் போலவே வந்ததடா.
எத்தனையோ உயிர் மாண்டிடவே - மிக்க
இன்னல் புரிந்துமே சென்றதடா.
எண்ணரும் உயிர்கள் எத்தனையோ - அதில்
இன்புற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம் - அந்தக்
கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே !
வேரற்று அம்மரம் வீழ:ந்ததுவே - பெரும்
வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே - அதன்
உன்னத நன்மையைப் பேசினரே.
அத்தனை மக்களும் வாடினரே - “இது
ஐயோ போனது!” என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும் - அது
எல்லார் உள்ளத்தும் நின்றதுவே!
|