பக்கம் எண் :

மலரும் உள்ளம்191

எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள் - அங்கு
    எமனைப் போலவே வந்ததடா.
எத்தனையோ உயிர் மாண்டிடவே - மிக்க
    இன்னல் புரிந்துமே சென்றதடா.

எண்ணரும் உயிர்கள் எத்தனையோ - அதில்
    இன்புற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம் - அந்தக்
    கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே !

வேரற்று அம்மரம் வீழ:ந்ததுவே - பெரும்
    வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே - அதன்
    உன்னத நன்மையைப் பேசினரே.

அத்தனை மக்களும் வாடினரே - “இது
    ஐயோ போனது!” என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும் - அது
    எல்லார் உள்ளத்தும் நின்றதுவே!