பக்கம் எண் :

192மலரும் உள்ளம்

சிறுமியின் உதவி

அருமை மிக்க நாயினை
    அழைத்துக் கொண்டு தெருவிலே
சிறுவன் ஒருவன் செல்லுவான்,
    தினமும் ஆடு மேய்க்கவே.

தெருவில் நாயும், அவனுமே
    செல்லு கின்ற காட்சியைச்
சிறுமி ஒருத்தி ஆவலாய்த்
    தினமும் பார்த்து வந்தனள்.

அன்று சிறுவன் மட்டுமே
    அங்கு வந்தான். ஆதலால்,
“இன்று உனது நாயினை
    எங்கே காணோம்?” என்றனள்.

“பொல்லாப் பையன் ஒருவனே
    பிரிய மான நாயினைக்
கல்லால் அடித்துப் போட்டனன்;
    காலை ஒடித்து விட்டனன்!