பக்கம் எண் :

206மலரும் உள்ளம்

யோசனை எப்படி?

வேலன் காட்டு வழியாக
வெளியூர் சென்றான், அப்பொழுது,

மரத்தை அடியில் வெட்டுகின்ற
மனிதன் ஒருவனைக் கண்டனனே.

“இத்தனை பெரிய மரத்தை நீ
எப்படி எடுத்துச் செல்வாயோ?”

என்று கேட்ட வேலனிடம்,
“எப்படி எடுத்துச் செல்லுவதா!

அங்கே வண்டி நிற்கிறதே,
அதில்தான்” என்றான், அம்மனிதன்.

“போ,போ, புத்தி கெட்டவனே
பிழைப்பது இப்படித் தானோ நீ

மரத்தைக் கீழே சாய்ப்பதுவாம்!
வண்டியில் அப்புறம் ஏற்றுவதாம்!