ஓடிப் பிடிக்கும் ஆட்டத்தில்
ஒருவ ருக்கும் அகப்படேன்
ஓடிச் சென்று சிவிங்கிமேல்
உடனே ஏறிக் கொள்ளுவேன்!
நெட்டை யான கழுத்திலே
தொட்டில் ஒன்றைக் கட்டுவேன்.
கட்டிக் கரும்புத் தங்கையை
இட்டு அதனில் ஆட்டுவேன்!
எச்சில் ஊறச் செய்திடும்
இனிப்புப் பண்டம் யாவையும்
உச்சி மீது அன்னையும்
ஒளித்து இனியும் வைப்பளோ?
நடக்கும் ஏணி இருக்கையில்
நமக்கு என்ன பயமடா?
இடக்குப் பண்ணி டாதடா!
எங்கும் சுற்ற லாமடா!
|