பக்கம் எண் :

218மலரும் உள்ளம்

ஆந்தை

ஆந்தை, ஆந்தை, பகலெல்லாம்
அடைந்து கிடப்பது எங்கே, சொல்?

தேடித் தேடிப் பார்த்தேன்நான்.
தெரிய வில்லை, உன்னுருவம்.

களவு செய்தே அகப்பட்ட
கள்ளன் போலே விழிப்பதுஏன்?

பொந்துக் குள்ளே இருப்பதுஏன்?
பொழுது பட்டே வருவதுஏன்?

முட்டைக் கண்கள் கண்டால்நாம் 
மிரள மாட்டோம்; வந்திடுவாய்

வெளிச்சம் கண்டால் கூசிடுமோ,
விரிந்த கண்கள்? கூறிடுவாய்.

“அழகை ஈசன் தரவில்லை.
அதனால் நானும் வரவில்லை”