என்றா காரணம் கூறுகிறாய்?
இதற்கேன் வெட்கம்; வந்திடுவாய்,
ஆந்தை, ஆந்தை அன்றொருநாள்
அப்பா உனது கதைசொன்னார்.
கண்ணைச் சுழற்ற மாட்டாயாம்;
கழுத்தைத் திருப்பியே பார்ப்பாயாம்.
புத்தி உனக்கு அதிகமெனப்
புகழ்ந்தார் தந்தை மேன்மேலும்.
புத்தி மிகுந்த அறிஞரேநீர்
புத்தகம் எத்தனை எழுதிவிட்டீர்?
எந்தக் கடையில் விற்றிடுமோ?
என்ன விலைக்குக் கிடைத்திடுமோ?
சும்மா விழித்துப் பார்ப்பதுஏன்?
சொன்னால் வாய்தான் வலித்திடுமோ?
|