தேரில் சாமி வந்ததும்
தேங்கா யொடு போகலாம்.
ஊரா ரோடு நாமுமே
உடைத்து வைத்து வணங்கலாம்.
பால்கோவா வாங்கலாம்.
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.
நாலே கால் பணத்திலே
நடக்கும் பொம்மை வாங்கலாம்.
பாட்டி நானும் கேட்பதைப்
பட்ச மாக வாங்குவாள்.
பாட்டி யவளைக் கையுடன்
கூட்டிக் கொண்டு திரும்புவேன்.
|
|
|