காந்தித் தாத்தா
காந்தித் தாத்தா நம்தாத்தா.
கருணை மிக்க பெருந்தாத்தா.
சாந்த மூர்த்தி, என்றென்றும்
சத்திய மூர்த்தி நம்தாத்தா.
ராட்டை சுற்றி நூற்பதிலே
நாளும் சிலமணி போக்கிடுவார்.
நாட்டு மக்கள் நலமெண்ணி
நமது தாத்தா சிறைவாழ்ந்தார்.
உச்சிக் குடுமித் தலையுடனே,
உடுப்பது நாலு முழந்தானே.
பச்சைக் குழந்தை போலெண்ணம்
படைத்தவர் காந்திப் பெருந்தாத்தா.
வளரும் குழந்தைக் கிருபற்கள்
வாயின் நடுவே கண்டிடலாம்.
வளர்ந்த நமது தாத்தாவின்
வாயில் அவ்விடம் பல்லில்லை!
|