பக்கம் எண் :

60மலரும் உள்ளம்

ஆட்டுப் பாலுடன் கடலையினை
       அவரும் உண்டு அன்பாக
நாட்டின் விடுதலை எண்ணமொடு
       நல்ல தொண்டு பலசெய்தார்.

மாலைப் பொழுது நடப்பாராம்.
       மகிழ்ந்து திரும்பி வருவாராம்.
வேலை இன்றிச் சிறுபொழுதும்
       வீணாய்ப் போக்க மாட்டாராம்.

கண்ணிற் சிறந்த விடுதலையைக்
       கருதி வாழ்ந்தார் நம்தாத்தா.
மண்ணில் யாவர் வாழ்விற்கும்
       வழிகாட் டிடுவார் நம்தாத்தா.

சத்தியம் பேசுதல் அவர்கொள்கை.
       தருமம் காத்தல் அவர்கொள்கை.
இத்தல மக்கள் யாவர்க்கும்
       இன்ப சுதந்திரம் அவர்கொள்கை.