பக்கம் எண் :

66மலரும் உள்ளம்

பார்

கடலின் மீது செல்லும் கப்பல்
       பார், தம்பி, பார் - அதைக் 
காணப் பலர் வருவதையே
       பார், தம்பி, பார்.

"தடத"டென்று அலைகள் வந்து
       பார், தம்பி, பார் - காலைத்
தழுவி விட்டுப் போவதையே
       பார், தம்பி, பார்.

சங்கும் நல்ல கிளிஞ்சல்களும்
       பார், தம்பி, பார் - இங்கே
சரள மாகக் கிடைக்குதடா
       பார், தம்பி, பார்.

பொங்கு கின்ற பாலினைப்போல்
       பார், தம்பி, பார் - இங்கு
தங்கி நிற்கும் நுரையுமுண்டு
       பார், தம்பி, பார்.