கேள்
முத்து நல்ல முத்துக்களாம்
கேள், தம்பி, கேள் - உள்ளே
மூழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
கேள், தம்பி, கேள்.
எத்த னையோ மீன்வகைகள்
கேள், தம்பி, கேள் -
இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.
மழையே பெய்யா திருந்திடினும்,
கேள், தம்பி, கேள் -
கடல்
வரண்டு போவ தில்லையடா
கேள், தம்பி, கேள்.
அலைகள் போடும் சத்தமடா
கேள், தம்பி, கேள் - அதை
அடக்க யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.
|