அன்னையின் அனுமதி
அம்மா, அம்மா, விளையாட
அழைக்கிறார்கள் தோழர்கள்.
சும்மா சும்மா இருந்தாலே
சோம்பல் அதிகம் ஆகிடுமே !
கூட்டை விட்டுப் பறந்தோடிக்
குருவிக் குஞ்சு திரிவதுபோல்
வீட்டை விட்டு நாங்களுமே
விளையா டிடவே சென்றிடுவோம்.
வெளியில் சென்றே எல்லோரும்
விளையா டிடுவோம் மகிழ்வுடனே.
மழலைச் சொற்கள் கேட்டிடவே
வழியில் செல்வோர் கூடிடுவர்.
மண்ணால் நல்ல வீடுகளை
மகிழ்ந்து நாங்கள் கட்டிடுவோம்.
பண்ணும் அந்த வீட்டினிலே
பறவைக் கூடும் கட்டிடுவோம்.
|