பக்கம் எண் :

மலரும் உள்ளம்95

காந்தி வழி

காந்தி சொன்ன வழிகளைக்
       கடைப்பி டித்து நடந்திடின்,
சாந்தி எங்கும் நிலவிடும்;
       சத்தி யந்தான் வென்றிடும்.

அன்பு ஓங்கி வளர்ந்திடும்;
       அஹிம்சை என்றும் நிலைத்திடும்;
இன்ப வாழ்வு பெருகிடும்;
       ஏழை துன்பம் ஒழிந்திடும்.

சாதிச் சண்டை தொலைந்திடும்;
       தருமம் எங்கும் தழைத்திடும்;
நீதி எங்கும் நிலைத்திடும்;
       நிறத்து வேஷம் நீங்கிடும்.

உலகில் அமைதி ஏற்படும்;
       யுத்தம் யாவும் ஒழிந்திடும்;
கலகம் நீங்கி எங்குமே,
       கருணை வெள்ளம் பெருகிடும்.