பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

பாரத நாடு

எங்கள் தாய்

(காவடிச்சிந்தில், ‘ஆறுமுகவடி வேலவனே’ என்ற வர்ண மெட்டு)

1 தொன்று நிகழ்ந்த தனைத்தும்
உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்
-- இவள் என்று பிறந்தவள்
என்றுண ராத இயல்பினளாம்
எங்கள்தாய்.
2 யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய்
-- இந்தப் பாருள் எந் நாளுமோர்
கன்னிகை என்னப் பயின்றிடு
வாள் எங்கள்தாய்.
3 முப்பது கோடி முகமுடை யாள்
உயிர் மொய்ம்புற
வொன்றுடையாள
-- இவள் செப்பு மொழிபதி
னெட்டுடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
4 நாவினில் வேதமுடையவள்
கையில் நலந்திகழ் வாளுடையாள்
-- தனை மேவினர்க் கின்னருள்
செய்பவள் தீயரை வீட்டிடு
தோளுடையாள்.
5 அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய
-தனைச் செறுவது நாடி வருபவ
ரைத்துகள் செய்து கிடத்துவள்
தாய்.
6 பூமியினும் பொறை மிக்குடை
யாள்பெரும் புண்ணிய
நெஞ்சினள்தாய்
-- எனில் தோமிழைப் பார்முன்
நின்றிடுங்ற்கொடுந் துர்க்கை
யனையவள் தாய்.
7 கற்றைச் சடைமதி வைத்த
துறவியைக் கைதொழு வாள்
எங்கள்தாய
-- கையில் ஒற்றைத்
திகிரிகொண்டேழுல காளும்
ஒருவனை யுந்தொழுவாள்.
8 யோகத்தி லேநிக ரற்றவள்
உண்மையும் ஒன்றென
நன்றறிவாள
-- உயர் போகத்தி லேயும்
நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்.
9 நல்லறம் நாடிய மன்னரை
வாழ்த்தி நயம்புரி வாள்
எங்கள்தாய்
-- அவர் அல்லவை ராயின்
அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.
10 வெண்மை வளரிம யாசலன்
தந்த விறன்மக ளாம்
எங்கள்தாய
-- அவன் திண்மை மறையினும்
தான்மறை யாள் நித்தஞ்
சீருறு வாள் எங்கள்தாய்.