1 |
தொன்று
நிகழ்ந்த தனைத்தும்
உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் |
--
இவள் என்று பிறந்தவள்
என்றுண ராத இயல்பினளாம்
எங்கள்தாய். |
2 |
யாரும்
வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் |
--
இந்தப் பாருள் எந் நாளுமோர்
கன்னிகை என்னப் பயின்றிடு
வாள் எங்கள்தாய். |
3 |
முப்பது
கோடி முகமுடை யாள்
உயிர் மொய்ம்புற
வொன்றுடையாள |
--
இவள் செப்பு மொழிபதி
னெட்டுடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள். |
4 |
நாவினில்
வேதமுடையவள்
கையில் நலந்திகழ் வாளுடையாள் |
--
தனை மேவினர்க் கின்னருள்
செய்பவள் தீயரை வீட்டிடு
தோளுடையாள். |
5 |
அறுபது
கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய |
-தனைச்
செறுவது நாடி வருபவ
ரைத்துகள் செய்து கிடத்துவள்
தாய். |
6 |
பூமியினும்
பொறை மிக்குடை
யாள்பெரும் புண்ணிய
நெஞ்சினள்தாய் |
--
எனில் தோமிழைப் பார்முன்
நின்றிடுங்ற்கொடுந் துர்க்கை
யனையவள் தாய். |
7 |
கற்றைச்
சடைமதி வைத்த
துறவியைக் கைதொழு வாள்
எங்கள்தாய |
--
கையில் ஒற்றைத்
திகிரிகொண்டேழுல காளும்
ஒருவனை யுந்தொழுவாள். |
8 |
யோகத்தி
லேநிக ரற்றவள்
உண்மையும் ஒன்றென
நன்றறிவாள |
--
உயர் போகத்தி லேயும்
நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள். |
9 |
நல்லறம்
நாடிய மன்னரை
வாழ்த்தி நயம்புரி வாள்
எங்கள்தாய் |
--
அவர் அல்லவை ராயின்
அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள். |
10 |
வெண்மை
வளரிம யாசலன்
தந்த விறன்மக ளாம்
எங்கள்தாய |
--
அவன் திண்மை மறையினும்
தான்மறை யாள் நித்தஞ்
சீருறு வாள் எங்கள்தாய். |