|
பேயவள் காண் எங்கள் அன்னை -- பெரும் பித்துடையள்
எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன் தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை.
|
(பேயவள்)
|
1
|
இன்னிசை யாம் இன்பக்
கடலில் -- எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள் -- அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அன்னை.
|
(பேயவள்)
|
2
|
தீஞ்சொற் கவிதையஞ் சோலை -- தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி -- மதுத்
தேக்கி நடிப்பள் எம் அன்னை.
|
(பேயவள்)
|
3
|
வேதங்கள் பாடுவள் காணீர் -- உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி -- உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்.
|
(பேயவள்)
|
4
|
பாரதப் போரெனில் எளிதோ? -- விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாளே
மாரதர் கோடிவந் தாலும் -- கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். |
(பேயவள்)
|
5 |