பாரத
நாடு
பாரத மாதா நவரத்தின மாலை
[ராகம் -- ஹிந்துஸ்தானி
தோடி]
|
காப்பு
வீரர்முப் பத்திரண்டு
கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே -- சீரார்
நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்
சிவரத்ன மைந்தன் திறம்.
|
வெண்பா
திறமிக்க நல்வயிரச்
சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை; அறிவு -- பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் ‘இந்தியா’ என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்.
|
1
|
\பு{[மு-ப.]:
‘பள்ளியெழுந்தருள்வாயே’
ஒன்பது பாடலிலும் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப்
பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப்பட்டிருத்தல் காண்க.
சிவரத்ன மைந்தன் -- சிவமாகிய இரத்தினத்திற்குப் பிறந்த மைந்தன்; விநாயகன்.
-- பாரதி பிரசுராலயக் குறிப்பு}
|
|
கட்டளைக்
கலித்துறை
காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
கும்பிட்டுக் கம்பனமுற்
றோலமிட் டோடி மறைந்தொழி வான்;
பகை யொன்றுளதோ?
நீலக் கடலொத்த கோலத்தி
னாள்மூன்று நேத்தி ரத்தாள்
காலக் கடலுக்கோர் பாலமிட்
டாள் அன்னை காற்படினே.
|
2 |
எண்சீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம்
அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்,
பரவுபுகழ்ப் புராணங்கள், இதிக சங்கள்;
இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. |
3 |
ஆசிரியப்
பா
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகு காப்புற்றது
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்,
குற்றமே தமது மகுடமாக் கொண்டோர்
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்;
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்.
இற்றை நாள்;
\பு{[குறிப்பு]: மூன்று நேத்திரந்தாள் -- இங்குலப் பாரத மாதாவை லோகதாவசீய
உமாதேவியாக பாவனை செய்யப்பட்டிருக்கின்றது.
-- பாரதி பிரசுராலயக் குறிப்பு}
பாரி லுள்ள பலநாட்
டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் -- உலகெலாம் புகழ
இன்பவளம் செறி பண்பல பயிற்றும்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்: -- “புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே உருவாம், மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தி” யென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிற இயலனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள். இதனால் படைஞர்தம்
செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் -- விரைவிலே.
(வெற்றி கூறுமின்; வெண்சங் கூதுமின்!)
|
4 |
தரவுகொச்சகக்
கலிப்பா
ஊதுமினோ வெற்றி!
ஒலிமினோ வாழ்த்தொலிகள்!
ஓதுமினோ வேதங்கள்!
ஓங்குமினோ! ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச்
செம்மணிமா நெறிகண்டோம்;
வேதனைகள் இனி வேண்டா;
விடுதலையோ திண்ணமே. |
5 |
\பு{[குறிப்பு]: ‘இன்பவளம்’ என்பதில் பவளம் என்ற மணியின் பெயர்
அமைந்திருப்பது காண்க.
‘செம் மணி மா நெறி’ -- செவ்விய அழகிய பெரிய
நெறி; அஃது ஒத்துழையாமை. செம்மணி -- மாணிக்கம்.}
|
வஞ்சி
விருத்தம்
திண்ணங் காணீர்! பச்சை
வண்ணன் பாதத் தாணை;
எண்ணம் கெடுதல் வேண்டா!
திண்ணம், விடுதலை திண்ணம்.
|
6 |
கலிப்பா
“விடுதலை பெறுவீர் விரை
வா நீர்!
வெற்றி கொள்வீர்” என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய் கின்றான்,
“சுடுத லும்குளி ரும் உயிர்க் கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;
எடுமி னோஅறப் போரினை” என்றான்
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!
|
7 |
அறுசீர்
விருத்தம்
காந்திசேர் பதுமராகக்
கடிமலர் வாழ் ஸ்ரீதேவி,
போந்துநிற் கின்றாள் இன்று
பாரதப் பொன்னாடெங்கும்.
மாந்தரெல் லோரும்சோர்வை
அச்சத்தை மறந்துவிட்டார்;
காந்திசொற் கேட்டார், காண்பார்
விடுதலை கணத்தினுள்ளே.
|
8
|
எழுசீர்க்கழிநெடிலாசிரிய
விருத்தம்
கணமெனு மென்றன் கண்முனே
வருவாய்,
பாரத தேவியே, கனல்கால்
இணைவிழி வால் வாயமாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே.
துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ் திருக்கோலம்
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.
|
9 |
\பு{[குறிப்பு]: கோமேதகம் என்ற இரத்னப் பெயர் தொனித்தல் காண்க.
வால் அவாயமாம் சிங்கம் -- பயங்கரமான வாலினை யுடைய சிங்கம்.
வாலவாயம்
என்பது வைடூர்யத்தின் பெயர்.} |