பாரத நாடு
பாரத தேவியின் திருத்தசாங்கம்
நேரிசை வெண்பா
|
நாமம்
(காம்போதி)
பச்சை மணிக்கிளியே!
பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய் -- இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு
|
1 |
நாடு
(வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்!
தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய் -- வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.
|
2 |
நகர்
(மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே
எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? -- சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.
|
3 |
ஆறு
(சுருட்டி)
வன்னக்கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய் -- நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.
|
4 |
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே!
தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய் -- ஞாலத்துள்
|
5
|
ஊர்தி (தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ
ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைத்தாய்! -- தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்.
|
6
|
படை (முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற்
கிள்ளாய்!
செருநரை வீழ்த்தும்படை யென்செப்பாய் -- பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேரு.
\பு{[பாட
பேதம்]: ‘தொன்மறை கணான்குடையாள்’
-- ஜன்ம பூமி.} |
|
7
|
முரசு (செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே அன்னைதிரு
முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய் -- பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.
|
8 |
தார் (பிலகரி)
வாராய் இளஞ்சுகமே வந்திப்பார்க்
கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய் -- சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.
|
9 |
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென் -- அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.
\பு{[பாட
பேதம்]: ‘வளர்முரசம் ஓதுவாய்’
‘குறுநகையால் முற்றுவித்து’
-- நாட்டுப் பாட்டு.
‘குத்திர முந்தீங்கு’
-- ஜன்ம பூமி.}
|
|
10
|