களக்கமுறும் மார்லிநடம்
கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்த்துக்
காய்த்ததொரு கனிதான்
|
விளக்கமுறப் பழுத்திடுமோ
வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினுமென்றன்
கரத்திலகப் படுமோ?
|
வளர்த்தபழம் கர்சானென்ற
குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சிசெயும்
அணில்கடித்து விடுமோ?
|
துளக்கமற யான்பெற்றிங்
குண்ணுவனோ, அல்லாலோ
தொண்டைவிக்கு மோஏதும்
சொல்லரிய தாமே? |