சுயசரிதை
ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர்
மறைவு குறித்துப்
பாடிய இரங்கற் பாக்கள்
அகவல்
|
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப |
5 |
\பு{குறிப்பு:
ஸ்ரீசுப்பராம தீக்ஷிதர் தென்னிந்தியாவின் பிரபல சங்கீத் வித்வான் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்களின்
புதல்வரும எட்டயபுரம்
சமஸ்தானப் பாகவதரும் ஆவார். அவர் 25-11-1906
அன்று காலஞ் சென்றபோது பாடிய இரங்கற்
பாக்களே மேலே உள்ளவை.}
|
ஈட்டிய செல்வம் இறந்தமை யானும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய அரக்கர் விளங்குதல் போல, |
10 |
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செரிந்துநிற் கின்றார்:
இவரிடை,
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்
அரக்கர் தங் குலத்திடை வீடண னாகவும் |
15 |
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்
போற்றுதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யருளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன |
20 |
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்.
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னோ நம்மவர் இயற்றிய பாவம்? |
25 |
இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்.
அந்தோ மறலிநம் அமுதினைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை; நுவல யாதுளதே? |
29 |
விருத்தம்
|
கன்னனொடு கொடைபோயிற்று உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட்சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனு
மகன்றதெனப் பகர லாமே. |
1 |
கலை விளக்கே, இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலை விளக்கே, எம்மனையா
மனவிருளை மாற்றுதற்கு வந்த ஞான
நிலை விளக்கே நினைப் பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலை விளக்கே யெனத்தளரும் அந்தோ! நீ
அகன்றதுயர் உரைக்கற் பாற்றோ?
|
2 |
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய், நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம
எனக்கருதி வந்தேன்! அந்தோ,
இன்னமொருக் காலிளசைக் கேகிடின் இவ்
வெளியன்மனம் என்ப டாதோ? |
3 |