கண்ணன் பாட்டு
கண்ணம்மா -- என் குழந்தை
(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
ராகம் -- பைரவி தாளம் -- ரூபகம்
|
ஸ ஸ ஸ -- ஸா ஸா -- பபப
தநீத -- பதப -- பா
பபப -- பதப -- பமா -- கரிஸா
ரிகம --ரிகரி -- ஸா
|
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.
|
சின்னஞ் சிறுகிளியே, -- கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே -- உலகில்
ஏற்றம் புரியவந்தாய்!
|
1
|
பிள்ளைக்
கனியமுதே, -- கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே -- என் முன்னே
ஆடிவருந் தேனே!
|
2 |
பு{[மு-ப.]:
ஸ ஸ ஸ -- ஸா ஸா ஸா -- ப ப பா} |
|
|
ஓடி வருகையிலே, -- கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ;
ஆடித்திரிதல் கண்டால் -- உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ.
|
3
|
உச்சி தனை
முகந்தால் -- கருவம்
ஓங்கி வளரு தடீ;
மெச்சி யுனையூரார் -- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ.
|
4
|
கன்னத்தில்
முத்தமிட்டால் -- உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ;
உன்னைத் தழுவிடிலோ, -- கண்ணம்மா!
உன்மத்த மாகு தடீ.
|
5
|
சற்றுன்
முகஞ் சிவந்தால் -- மனது
சஞ்சல மாகு தடீ;
நெற்றி சுருங்கக் கண்டால் -- எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ
|
6
|
உன்கண்ணில்
நீர்வழிந்தால் -- என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ;
என்கண்ணில் பாவையன்றோ? -- கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?
|
7
|
சொல்லு
மழலையிலே, -- கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே -- எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.
|
8
|
இன்பக் கதைக
ளெல்லாம் -- உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே -- உனைநேர்
ஆகுமொர் தெய்வ முண்டோ?
|
9
|
மார்பில்
அணிவதற்கே -- உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -- உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ? |
10
|