வீமனுடைய வீரப்பேச்சு
|
வீமனும் திகைத்து விட்டான்; -- இள
விசயனை நோக்கிஇங் கிதுசொலுவான்:
‘மாமனும் மருமகனுமா -- நமை
யழித்திடக் கருதிஇவ் வழிதொடர்ந்தார்.
தாமதஞ் செய்வோமோ? -- செலத்
தகுந்தகு’ மெனஇடி யுறநகைத்தான்;
‘கோமகன் உரைப்படியே -- படை
கொண்டுசெல் வோமொரு தடையிலைகாண்! |
133 |
‘நெடுநாட் பகைகண்டாய்; -- இந்த
நினைவினில் யான்கழித் தனபலநாள்;
கெடுநாள் வருமளவும் -- ஒரு
கிருமியை அழிப்பவர் உலகிலுண்டோ? |
|
படுநாட் குறிஅன்றோ -- இந்தப்
பாதகம் நினைப்பவர் நினைத்ததுதான்?
விடுநாண் கோத்திடடா! -- தம்பி,
வில்லினுக் கிரைமிக விளையுதடா. |
134 |
‘போரிடச் செல்வமடா! மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? -- இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத் திவரொடுநாம் -- எனப்
பகுதியிவ் விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? -- இரு
நெருப்பினுக் கிடையினில் ஒருவிறகோ?’ |
135 |