பக்கம் எண் :

காவியங்கள் : கற்பனையும் கதையும்

சூதுக்கு அழைத்தல்

புன்தொழிற் கவறத னில் -- இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்,
நன்றறி யாச்சகுனி, -- சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்;
வென்றிகொள் பெருஞ்சூதர் -- அந்த
விவிஞ்சதி சித்திர சேனனுடன்
குன்றுசத் தியவிர தன் -- இதழ்
கூர்புரு மித்திரன் சயனென்பார்
164

சாலவும் அஞ்சுதரும் -- கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலே -- வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தனரால்;
மேலவர் தமைவணங்கி -- அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆலமுற்றிடத் தழுவிச் -- செம்பொன்
ஆதனத் தமர்ந்தவப் பொழுதினிலே,
165

சொல்லுகின் றான்சகுனி: -- ‘அறத்
தோன்றல்உன் வரவினைக் காத்துளர்காண்
மல்லுறு தடந்தோளார் -- இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா;
வில்லுறு போர்த்தொழி லாற் -- புவி
வென்றுதங்குலத்தினை மேம்படுத்தீர்!
வல்லுறு சூதெனும் போர் -- தனில்
வலிமைகள் பார்க்குதும் வருதி’என்றான்.
166