பாரதி திருப்புகழ்
[ 1 ]
|
தோதக மெத்தெனை யத்தனை கற்றவர்
சூதர மொத்தவர் கொக்கு நிகர்ப்பவர்
சூதுபெருத்தவர் உக்ர மனத்தவர் -- சதியோடே
|
1 |
பாதக நித்தமு மெத்த விழைப்பவர்
பாரக முற்றவு நத்து சினத்தவர்
பாவமி யற்றிடு மத்துறை மிக்கவர் -- விரகாலே |
2 |
26. ஆதாரம்: பாரதி புதையல் 2 -- பக்கம் 127-130
|
வேதனை பற்பல உற்றன நற்றிறல்
வீரம ழித்துஅதி துக்கமி குத்தி
மேதகு நற்கலை முற்ற ஒழித்தனம் -- இனியேனும்
|
3 |
ஆதர முற்றொரு பக்க நிலைத்தவர்
ஆணவ முற்றவரீற்றுமரித்திடர்
யாவரு மித்ததி நட்பொடு சட்டென -- வருவீரே.
|
4 |
[ 2 ]
|
மறமே வளர்த்த கொடியார் ஒழுக்க
வழியே தகர்த்த -- சதியாளர்
மதமேவு மிக்க குடிகேடர் உக்கிர
மனமேவும் அற்பர் -- நசையாலே
அறமே யழிந்து வசையே தழைத்த
அதிநீசர் மிக்க -- அகமேவி
அறிவே சிறுத்த முழுமூடர் வெற்றி
அதி யாணவத்தர் -- முறையாலே
விறலே மறுக்க உணவேது மற்று
விதியோ எனக்கை -- தலைமோதி
விழிநீர் சுரக்க வெகு வாதை யுற்று
மெலிவாகி நிற்றல் -- அழகாமோ!
புறம்மேவு பக்தர் மனமாசறுத்த
புனிதா குறப்பெண் -- மணவாளா
புகலேது மற்ற தமியேமை ரட்சி
பொருவேல் பிடித்த-பெருமாளே.
|
கண்ணன்மீது திருப்புகழ்
[ 3 ]
|
செயிர்த்த சிந்தையர் பணநசை மிகமிக
வருத்த வந்தவல் வினைபுரி முகடிகள்
சிறக்கு மன்பதை யுயிர்கவர் எமபடர் -- எனவாகி
|
1 |
சினத்தின் வஞ்சக மதியொடு நிகரறு
நலச்சு தந்திர வழிதெரி கரிசகலு
திருத் தகும் பெரி யவர்களை யகமொடு -- சிறையூடே
|
2 |
வயிர்த்த கொள்கையின் வசைசொலி யுணவற
வருத்தி வெந்துயர் புரிபவர் சுயநல
மனத்து வன்கணர் அறநெறி தவறிய -- சதியாளர்
|
3 |
மதர்த்தெ ழுந்தைன் புளகித இளமுலை
மருட்டு மங்கையர் அழகினில் நிதியினில்
வசப்ப டும்படி சிலர்களை மயல்புரி -- அதிநீசர்
|
4 |
மயிர்த் தலந்தொறும் வினைகிளர் மறமொடு
மறப்ப ரும்பல கொலைபுரி கொடியவல்
வனக்கு றும்பர் வெவ் விடநிகர் தகவினர் -- முறையாலே
|
5 |
வருத்த ரும்பல பவிஷுகள் ஒழிதா
வகைப்பெரு ங்கலை நெறியறம் அழிபடா
மனத்து விஞ்சிய தளர்வொடு மனுதினம் -- உழல்வோமே.
|
6 |
அயிர்த்த வஞ்சக அரவுயர் கொடியவன்
அமர்க்க ளந்தனில் இனமுடன் மடிதர
அமர்த்த வெம்பரி யணிரத மதைவிடும் -- மறைநாதா
|
7 |
அளப்ப ருங்குண நலமிக நினைபவர்
அகத்தெ ழும்படர் அலரிமுன் பனியென
அகற்று செந்திரு மடமயில் தழுவிய -- பெருமாளே!
|
8 |
பாரதி தேவாரம்
[ 4 ]
|
அதியாசை விஞ்சி நெறியேது மின்றி
அவமான வஞ்ச மிகவே
துதிமேவு மெங்கள் பழநாடு கொண்டு
தொலையாத வண்மை யறநீளும்
சதியேபுரிந்த படுநீசர் நைந்து
தனியோட நன்கு வருவாய்
நதியேறு கொன்றை முடிமீதி லிந்
நகையாடும் செம்பொன் மணியே!
|