1.
|
ஆதிப்
பரம்பொருளின் ஊக்கம் |
--
அதை அன்னை எனப்பணிதல்
ஆக்கம்; |
|
சூதில்லை
காணுமிந்த நாட்டீா |
--
மற்றத் தொல்லை
மதங்கள்செய்யும் தூக்கம். |
|
2. |
மூலப்
பழம்பொருளின் நாட்டம் |
--
இந்த மூன்று புவியுமதன்
ஆட்டம்; |
|
காலப்
பெருங்களத்தின் மீதே |
--
எங்கள் காளி நடமுலகக்
கூட்டம். |
|
3. |
காலை
இளவெயிலின் காட்சி |
--
அவள் கண்ணொளி காட்டுகின்ற
மாட்சி; |
|
நீல
விசும்பினிடை இரவில் |
--
சுடர் நேமி யனைத்துமவள்
ஆட்சி. |
|
4. |
நாரண
னென்று பழவேதம் |
--
சொல்லும் நாயகன் சக்தி
திருப்பாதம்; |
|
சேரத்
தவம் புரிந்து பெறுவார் |
--
இங்குச் செல்வம் அறிவு
சிவபோதம். |
|
5. |
ஆதி
சிவனுடை சக்தி |
--
எங்கள் அன்னை யருள்பெறுதல்
முக்தி; |
|
மீதி
உயிரிருக்கும் போதே |
--
அதை வெல்லல் சுகத்தினுக்கு
யுக்தி |
|
6. |
பண்டை
விதியுடைய தேவி |
--
வெள்ளை பாரதி யன்னையருள்
மேவி, |
|
கண்ட
பொருள் விளக்கும் நூல்கள் |
--
பல கற்றலில் லாதவனோர்
பாவி. |
7. |
மூர்த்திகள்
மூன்று பொருள் ஒன்று: |
--
அந்த மூலப் பொருள்ஒளியின்
குன்று: |
|
நேர்த்தி
திகழும் அந்த ஒளியை |
--
எந்த நேரமும் போற்று
சக்தி என்று. |