பக்கம் எண் :

பாமாலை : பக்தி பாடல்கள்

தோத்திரப் பாடல்கள்

சக்தி விளக்கம்

1. ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் -- அதை அன்னை எனப்பணிதல்
ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீா -- மற்றத் தொல்லை
மதங்கள்செய்யும் தூக்கம்.
2. மூலப் பழம்பொருளின் நாட்டம் -- இந்த மூன்று புவியுமதன்
ஆட்டம்;
காலப் பெருங்களத்தின் மீதே -- எங்கள் காளி நடமுலகக்
கூட்டம்.
3. காலை இளவெயிலின் காட்சி -- அவள் கண்ணொளி காட்டுகின்ற
மாட்சி;
நீல விசும்பினிடை இரவில் -- சுடர் நேமி யனைத்துமவள்
ஆட்சி.
4. நாரண னென்று பழவேதம் -- சொல்லும் நாயகன் சக்தி
திருப்பாதம்;
சேரத் தவம் புரிந்து பெறுவார் -- இங்குச் செல்வம் அறிவு
சிவபோதம்.
5. ஆதி சிவனுடை சக்தி -- எங்கள் அன்னை யருள்பெறுதல்
முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே -- அதை வெல்லல் சுகத்தினுக்கு
யுக்தி
6. பண்டை விதியுடைய தேவி -- வெள்ளை பாரதி யன்னையருள்
மேவி,
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் -- பல கற்றலில் லாதவனோர்
பாவி.
7. மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று: -- அந்த மூலப் பொருள்ஒளியின்
குன்று:
நேர்த்தி திகழும் அந்த ஒளியை -- எந்த நேரமும் போற்று
சக்தி என்று.