| | சித்தம் இரங்கி யெனக் குய்யும் வழிய ருளல் உன் கடன் அல்லவோ? ஆழியோ பிறவிப் பே- | (ஏதும்) |
| | ராழி, அலைகள் மோதும் ஆழி, இதன் நடுவே சூழும் புயலெ ழுந்து சுற்றிச் சுழலும் வேளை, ஏழை விடுங் கலத்துக் கெவரும் துணைவே றுண்டோ? | (ஏதும்) |
| | 57. ஆதிப் பொதுமறை | |
| | இராகம் - சக்கரவாகம் தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
1841 | | ஆதிப் பொதுமறையை - அனுதினம் ஓதிப் பழகு வமே. | |
| | அநுபல்லவி | |
| | ஜாதி மதபேதம் ஏதுமிலாநடு நீதியை எங்கும் நிலை நிறுத்தவந்த | (ஆதிப்) |
| | சரணம் | |
| | தெய்வப் பெரும் புலவன் - தமிழ் நிலம் செய்தவத் தால்பிறந்தோன்; ஐயந் திரிபற உண்மை அறிந்தவன் வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய | (ஆதிப்) |
| | பள்ளிச் சிறுவரொடு - சிறுமியர் பண்டிதர் பாமரரும், உள்ளக் களிப்புடன் ஒன்றாகக் கூடியே தெள்ளத் தெளிந்த குரலில் தெருவெல்லாம் | (ஆதிப்) |