| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 543 |
Untitled Document வன்னக் கிளியே ஒருகிண்ணம் மதுவை ஊற்றித் தருவாயே. எல்லாம் இங்கோர் சூதாட்டம்; இரவும் பகலும் மாறாட்டம் வல்லான் விதியே ஆடுமகன்; வலியில் மனிதர் கருவிகளாம்; சொல்லா தெங்கும் இழுத்திடுவான், ஜோடி சேர்ப்பான், வெட்டுவான், செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த் திரும்ப அறையில் இட்டிடுவான். |
இறைவன் தலையிடாதபடி நம்மையே இச் சூட்டாத்தைத் தீர்த்துக் கொள்ளும்படி விட்டிருப்பானானால், திருப்திகரமான ஒரு முடிவைத் தேடியிருப்போமல்லவா? |
அன்பே யானும் நீயும் இசைந்து அயலில் எவரும் அறியாமல் வன்பே உருவாம் விதியினையும் வளைத்துள் ளாக்கி முயல்வோமேல், துன்பே தொடரும் இவ்வுலகைத் துண்டு துண்டாய் உடைத்துப்பின் இன்பே பெருகி வளர்ந்திடுமோர் இடமாய்ச் செய்ய இயலாதோ? |
இந்நிலையில் மனிதன் என்னதான் செய்யக்கூடும்? மதுபானம் செய்து, அறிவை மயக்கி அதில் மூழ்கிக் கிடப்பதுதான் அவன் செய்யக் கூடியது. உறுதியாக ஒன்றுதான் உள்ளது. அது யாது என்றால், நிகழும் நிமிஷம்தான். வாழ்வு சிறிது காலம்தான்; முடிவு நெருங்கி வருகிறது. அந்தக் காலத்தை வீணே போக்காது இன்ப நுகர்ச்சியில் கழித்தல் வேண்டும். புகழ் வேண்டாம்; செல்வம்வேண்டாம்; அதிகாரம்வேண்டாம். இந்திரிய சுகங்களை, இப்பொழுதே சக்தி இருக்கும் வரை, கைப்பற்ற வேண்டும் இந்த உபதேசத்தில் வாழ்விற்காணும் தோல்வியும் துன்பமும் இவற்றைமூழ்கடிப்பதற்குவேண்டும் எக்களிப்பும்தெளிவுறுத்தப்படுகின்றன. |
ஒழிந்த பாழில் ஒரு கணமாம்; உயிர்வாழ் உலகில் ஒரு கணமாம்; வழிந்து விண்ணின் மீன்க ளெல்லாம் மங்கி மங்கி மறைந்தனவே | |
|
|