பக்கம் எண் :

கனவுகள் + கற்பனைகள்

உன்னை வரவேற்கிறேன்.

என்னை மீண்டும்
இசைக்க வைக்க வந்துள்ளாய்;
உன்னை வரவேற்கிறேன்.

நான் மகரயாழ்;
உன் மணிக்கரம்
தீண்டினால் போதும்.

என்னால்
உனக்குப் பெருமை வரும்;
உன்னால்
எனக்கு வாழ்வு வரும்.

உன்னை வரவேற்கிறேன்.

1