பக்கம் எண் :

இந்த உலகம் -

இதுவரை
முட்காடாக வலித்தது;
இப்போது
முல்லைக்காடாக மணக்கிறது.

இதுவரை
எரிமலையாகத் தகித்தது;
இப்போது
பனிமலையாகக் குளிர்கிறது.

இதுவரை
கானல் நீராகக் கசந்தது;
இப்போது
காவிரி நீராக இனிக்கிறது.

என் எண்ணங்களில் பாடும்
கன்னங் கரிய குயிலே,

எல்லாம் உன் ரசவாதம்தான்!

12