ஒரு வைகறையில், நீ ஈர உடையோடு வருகிறாய்; உன்னை மேலும் கீழும் பார்க்கிறேன்.
கண்ணாடிக் கிண்ணத்தில் தென்படும் திராட்சைச் சாறு போல நீ என் விழிக்கு விருந்து வைக்கிறாய்.
“இந்த அழகை இதுவரை நான் பார்த்ததில்லையே..”
“உம்......”
“இரு கைகளாலும் அப்படியே அள்ளப் போகிறேன்.”
“வீதியில் இப்படி விளையாடலாமா? விலகுங்கள்...நீரோடு நிற்கிறேன்...”
“நான் மேனியை நீறாக்கும் நெருப்போடு நின்று கொண்டிருக்கிறேன்...”
“பேசாமல் அந்தக் குளத்தில் போய்க்குதியுங்கள்; நான் போகிறேன்.”
“உன் பாதம் பட்ட படித்துறையையாவது காட்டி விட்டுப் போகக் கூடாதா?”
இதுவும் ஒரு கனவுதான்!
57 |
|
|
|