முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
நீரிலே நெடுநாட்களாகக் கிடந்தாலும்
கருங்கல் கரைவதில்லை;
ஓராயிரம் இளம் பார்வைகளில்
மூழ்கியும்
முன்பெல்லாம்
என் மனம் கரையவில்லை.
இன்று-இது என்ன அதிசயம்!
ஒரே வினாடியில்
உன் ஈரப் பார்வையில்
என் மனம் உப்பாகி விட்டதே!
6
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்