நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன். நீ சிரிக்கிறாய்.
புதிதாய்த் தானம் கொடுக்கப் புறப்பட்டவன் ஆள் தெரியாமல் கர்ணன் வீட்டுக் கதவைத் தட்டுவதைப் போல்--
புதிதாய்ச் சாற்றுக்கவி பாடப் பழகியவன் அடையாளம் தெரியாமல் கம்பன் தெருவில் கால்வைப்பதைப் போல்-
நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
பூங்கொடியே, நீ சிரிக்காமல் என்ன செய்வாய்?
61 |
|
|
|