பக்கம் எண் :

நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
நீ சிரிக்கிறாய்.

புதிதாய்த்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல்--

புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்-

நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.

பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?

61