உன் நெற்றியைப் பார்த்துவிட்டு “எந்தக் கோயிலுக்குப் போய்விட்டு வருகிறாய்” என்கிறேன்.
“முருகன் கோயிலுக்கு...” பதில் பஞ்சாமிர்தமாய் வருகிறது.
“அவன் ஒரு மயில் மேல் மட்டுமல்ல இரு மயில்களோடும் இருக்கிறான் என்பதை மறந்து விட்டாயா?” என்கிறேன்.
“அந்தத் துணிச்சலில் அரைவாசியாவது உங்களுக்கு இருந்தால் இந்நேரம்... என்று தான் நினைத்துக் கொண்டு வருகிறேன்” உன் பதில் வேலாய் வந்து விழுகிறது.
நீ பொல்லாதவள்!
63 |
|
|
|