பக்கம் எண் :

“உலகத்திலேயே
நான்தான் பெரிய கொள்ளைக்காரன்”
என்கிறேன்.

“நீங்களா?” என்று கேட்டு வியக்கிறாய்.

“ஆமாம்..
உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள
அழகுச் செல்வத்தையெல்லாம்
நான்தானே கொள்ளையடித்துக்
கொண்டிருக்கிறேன்.
பாவம்,
நீ இவ்வளவு அழகைப் பெற்றிருந்தும்
அனுபவிக்க முடியவில்லையே!
செல்வத்தைச் சேர்ப்பவர் ஒருவர்;
துய்ப்பவர் ஒருவர்.
உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்”
என்கிறேன்.

“நீ சிரித்துக்கொண்டே
பாவம், நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்கள்;
நான் வெறும் அழகைக் கொடுத்துவிட்டு
உங்கள் அழியா அன்பு முழுவதையும்
கொள்ளையடித்து விட்டேனே..”
என்கிறாய்.

நீ மிகமிகப் பொல்லாதவள்.

64