“உலகத்திலேயே நான்தான் பெரிய கொள்ளைக்காரன்” என்கிறேன்.
“நீங்களா?” என்று கேட்டு வியக்கிறாய்.
“ஆமாம்.. உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள அழகுச் செல்வத்தையெல்லாம் நான்தானே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறேன். பாவம், நீ இவ்வளவு அழகைப் பெற்றிருந்தும் அனுபவிக்க முடியவில்லையே! செல்வத்தைச் சேர்ப்பவர் ஒருவர்; துய்ப்பவர் ஒருவர். உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்” என்கிறேன்.
“நீ சிரித்துக்கொண்டே பாவம், நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்கள்; நான் வெறும் அழகைக் கொடுத்துவிட்டு உங்கள் அழியா அன்பு முழுவதையும் கொள்ளையடித்து விட்டேனே..” என்கிறாய்.
நீ மிகமிகப் பொல்லாதவள்.
64 |
|
|
|