பக்கம் எண் :

உன் வீட்டுக்குப் போகும் பாதையில்
சுடுகாடு இருக்கிறது.

நான் உரிமையோடு
உன் வீட்டுக்கு வரவேண்டும்
என்று ஆசைப்பட்டேன்.

ஆனால்
சுடுகாட்டிலேயே நான் தங்கிவிட வேண்டும்;
அதைத் தாண்டி வரவேண்டாம்
என்று நீ ஆசைப்படுகிறாய்...இல்லையா?

76