உனக்கென்ன- ஒரு பார்வையை வீசிவிட்டுப் போகிறாய்... என் உள்ளமல்லவா, வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது.
உனக்கென்ன- ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகிறாய்... என் உயிரல்லவா, மெழுகாய் உருகி விழுகிறது.
உனக்கென்ன- போகிறாய்...போகிறாய்... என் ஆன்மாவல்லவா, அனிச்சமாய் உன் அடிகளில் மிதிபடுகிறது.
8 |
|
|
|