பக்கம் எண் :

மீரா.27

9

கலைத்தாராம் தவம்,
கதைக்கிறார் சில
விநோத விசித்திரர் ;
மேனகை நீ வர
வேண்டுமன்றல்லவா
தவம் புரிந்தார்
அந்த விசுவாமித்திரர்.

10

எருமை
புல்லைக் கடித்து மென்றது
எருமை முதுகின்
புண்ணைக் கொத்தித் தின்றது
அண்டங் காக்கை.