பக்கம் எண் :

மீரா.29

13

புகழை நட நான்
போர்க்களம் போகிறேன்
என்றான் பாவிப் பயல்
இப்போது பாவம் இவள்
அறுத்து முடித்த வயல்.

14

ஊரெங்கும்
திருவிழாக் கோலம்
மக்கள் நெருக்கம்
மல்லிகைச் சரமாய்

நான் மட்டும்
ஒதுங்கியிருந்தேன்
ஒற்றைப் பனை மரமாய்.