பக்கம் எண் :

மீரா.61

77

தண்ணீர்க் குள்ளே
கிடக்கும் சிப்பி
ஒரு - கண்ணீர்த் துளிக்காய்
நெஞ்சில் முத்துக்
காதல் நிரப்பி.

78

போதும் என்று
புறப்பட்டேன்
விடவில்லை சுலபத்தில் ;
நீலமலை மேகங்கள்
பன்னீர் தெளித்தன
பேருந்தின் சன்னலோரம்
பயணம் செய்த என் முகத்தில்.