பக்கம் எண் :

66.குக்கூ

87

ஓடும் ரயிலில்
உட்கார்ந்திருந்த
அணங்கின் பார்வையில் ஏக்கம்
நாகரிகமாய் நகர்ந்தேன் ;
நன்றி சொல்லாமல்
நீட்டிப் படுத்தாள் ;
நல்ல தூக்கம் !

88

சொல்லில் அடங்கா ஆத்திரம்
சும்மா விடக்கூடாது அவளை
கொண்டு வந்து
கொட்டுங்கள்
கோடி ரோஜாப் பூக்களை.