பக்கம் எண் :

    பாம்பைக் கொன்ற வீரன் !


                   
சாலிக் கிராமம் அருகிலே
                      
சைக்கிள் ஓட்டிச் செல்கையில்,
                    நாலு மீட்டர் இருக்கலாம்;
                      
நடுவே பாம்பு கிடந்தது.

                    அஞ்ச வில்லை நானுமே;
                      
அலற வில்லை நானுமே;
                    கொஞ்ச மேனும் தயக்கமும்
                      
கொள்ள வில்லை நானுமே.

                    நிலவின் ஒளியில் வேகமாய்

                       நேராய் எனது சைக்கிளைத்

                    தலையைப் பார்த்து ஏற்றினேன்;
                      
‘சட்னி’ என்றே எண்ணினேன்.

                    சிறிது தூரம் சென்றதும்,
                      
திரும்பிப் பார்த்தேன் நானுமே.
                    சிறுவர் இருவர் என்னிடம்
                      
சிரித்துக் கொண்டே வந்தனர்.

                   “உண்மைப் பாம்பு என்றுநீ
                    
 ஓலைப் பாம்பை எண்ணினாய்.
                    நன்கு வீரம் காட்டினாய்,
                     
நண்பா” என்றே நகைத்தனர்.

 
133