மரவட்டை
ஊர்ந்து செல்லும் அட்டையைக்
கூர்ந்து பார்த்தேன் நானுமே.
அடடே, கால்கள் எத்தனை !
யாரால் எண்ண முடியுமோ ?
ஆயி ரந்தான் இருக்குமோ ?
அதற்கு மேலும் போகுமோ ?
இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.
ஆயி ரங்கால் இருந்துமே
அதற்கு வேகம் இல்லையே !
கிட்டச் சென்றே அட்டையைத்
தொட்டுப் பார்த்தேன், நானுமே.
சட்டென் றந்த அட்டையும்
வட்ட மாகச் சுருண்டதே !
|