பாப்பாவின் அழுகை
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !
|