பக்கம் எண் :

              சின்னப் பாப்பா அழுதது;
              தேம்பித் தேம்பி அழுதது.

                
சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
                    அழுகை நிற்க வில்லை.
                 தாளம் போட்டுக் காட்டலானார்
                    அழுகை நிற்க வில்லை!

             
சின்னப் பாப்பா அழுதது;
              தேம்பித் தேம்பி அழுதது.


                
அம்மா உடனே அருகில் வந்தாள்;
                    அழுகை நிற்க வில்லை.
                 ‘ஆ...ராரோ’ பாட லானாள்
                     அழுகை பறந்து போச்சு !

 

 
68