சின்னப்
பாப்பா அழுதது;
தேம்பித்
தேம்பி அழுதது.
சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித்
தேம்பி அழுதது.
அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
‘ஆ...ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !
|